மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினம் 

வவுனியா

UPDATED: Sep 11, 2024, 1:27:01 PM

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 103வது நினைவு தினம் இன்று வவுனியா குருமன்காட்டு சந்தியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலையடியில் இடம்பெற்றிருந்தது.

இதன்போது அவரது திருவுருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

அத்துடன் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் தொடர்பான நினைவு பேருரைகளை செல்வி து.டன்சிகா, செல்வன் பி.அனிஸ்ரன், செல்வன் ரொ.றக்ஸன், மற்றும் தமிழ்மணி அகளங்கனாலும் ஆற்றப்பட்டிருந்தது.

வவுனியா நகரசபை மற்றும் தமிழ் விருட்சத்தின் ஏற்பாட்டில் சிறீசங்கரின் அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 

original/img-20240901-wa0070
முன்னாள் செட்டிகுளம் பிரதேச சபை தலைவர் ஜெகதீஸ்வரன், முன்னாள் நகரசபை உறுப்பினர் சேனாதிராஜா, நகரசபை முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் புஸ்பாகரன், தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க தலைவர் ரவீந்திரன், பொது அமைப்பினர், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended