ஸ்ரீமுஷ்ணத்தில் போஸ்கோ சட்டத்தில் வாலிபர் கைது.

சண்முகம்

UPDATED: Apr 3, 2024, 6:29:16 AM

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிக்குட்பட்ட பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் விஜய் இதே ஊரைச் சேர்ந்த அரசங்குட்டை தெருவை சேர்ந்த பெண் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.

விஜயன் அந்த பெண்ணை காதலிப்பதாக கூறி பலமுறை நெருக்கடி கொடுத்துள்ளார் காதலை ஏற்காத மாணவி தனது தாய் தந்தையிடம் சொல்லிவிடுவேன் என விஜயனை பலமுறை எச்சரித்துள்ளார்

இதனை ஏற்காத விஜயன் மாணவிக்கு நெருக்கடி அதிகமாக கொடுத்ததால் மாணவி வீட்டில் இருந்த எலி மருந்தை சாப்பிட்ட பின் தனது தாய் தந்தையிடம் நடந்த விஷயங்களை கூறியுள்ளார் மாணவி

இதனால் பதட்டம் அடைந்த பெற்றோர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் பரிசோதித்த மருத்துவர் மாணவி கவலைக்கிடமாக உள்ளதால் சென்னை ஸ்டாலின் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஸ்ரீமுஷ்ணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆய்வாளர் ராபின்சன் விஜயனை கைது செய்து விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

  • 31

VIDEOS

Recommended