• முகப்பு
  • போக்சோ
  • திருவண்ணாமலையில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனுக்கு மூன்றாண்டு சிறை.

திருவண்ணாமலையில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டவனுக்கு மூன்றாண்டு சிறை.

அஜித் குமார்

UPDATED: Mar 22, 2024, 7:12:23 PM

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், தொழிலாளி.

இவர் 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாராம்.

இதனால், பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

Also Read : மயிலாடுதுறையில் நேற்று இரவு  ரவுடி தலை சிதைக்கப்பட்டு வெட்டி படுகொலை.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் தானிப்பாடி போலீசில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, திருவண்ணாமலை ரூரல் டிஎஸ்பி அண்ணாதுரை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Also Read : அரவிந்த் கெஜ்ரிவால் கைது கீழ்த்தரமான அரசியல் கொடுங்கோன்மை.

மேலும், சிறுமியிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட கண்ணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Also Read : நாகை நாடாளுமன்ற தொகுதிக்கு யாரும் இதுவரையில் வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் வேட்பாளர்களுக்காக அதிகாரிகள் காத்திருப்பு.

இது தொடர்பான வழக்கு விசாரணை, திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி, சிறுமியிடம் பாலியல் சில்மிஷம் செய்த கண்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூபாய் 15 ஆயிரம் அபராதமும், அதை செலுத்த தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு அளித்தார்.

Also Read : சுந்தரா டிராவல்ஸ் ராதா வீட்டின் எதிரில் கஞ்சா புழக்கம்?

அதைத்தொடர்ந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கண்ணனை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

  • 7

VIDEOS

Recommended