- முகப்பு
- மாவட்டச் செய்தி
- புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் ஐ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேல்முருகன் திறந்து வைத்தார்.
புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் ஐ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வேல்முருகன் திறந்து வைத்தார்.
இடும்பன்
UPDATED: May 24, 2023, 10:13:16 AM
கடலூர் மாவட்டம் அண்ணா கிராமம் ஒன்றியம் எழுமேடு ஊராட்சிக்கு உட்பட்ட முத்து நாராயணபுரம் கிராமத்தில் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க புதிதாக ஆழ்துளை போர்வெல் அமைத்து தருமாறு எழுமேடு ஊராட்சி மன்றதலைவர் ரஞ்சித்குமார் தலைமையில பகுதி மக்கள் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர்.
இதை அடுத்து அண்ணா கிராமம் ஒன்றிய ஊராட்சி நிர்வாகம் 7 லட்சம் ஒதுக்கீடு செய்தது,
தற்போது அந்த பணி முடிவடைந்த நிலையில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் (எம்.எல்.ஏ) புதிதாக அமைக்கப்பட்ட போர்வெல் ஐ பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.