• முகப்பு
  • india
  • பிரான்ஸ் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 5 மற்றும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. பிரெஞ்சு குடியுரிமை பெற்று புதுச்சேரியில் உள்ளவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பிரான்ஸ் சட்டமன்ற தேர்தல் வருகின்ற 5 மற்றும் 19ஆம் தேதி நடைபெறுகிறது. பிரெஞ்சு குடியுரிமை பெற்று புதுச்சேரியில் உள்ளவர்கள் வாக்களிக்க உள்ளனர்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள், தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில், கடந்த எப்ரல் 10 மற்றும் ஏப்ரல் 24ஆம் தேதிகளில் நடந்த, பிரான்சு நாட்டின் குடியரசுத் தலைவருக்கான தேர்தல்களில் பங்கேற்று வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து, தற்போது, பிரான்ஸ் அரசு தனது குடிமக்களுக்கு, பிரெஞ்சு குடியுரிமையுள்ள குடிமக்களுக்காக, தங்கள் பிரதிநிதியை நியமிக்க வாய்ப்பு வழங்குகிறது. அதற்கான தேர்தலை ஜூன் 5ஆம் தேதி தொடங்கி நடத்துகிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மை வயதை எட்டிய மற்றும் தூதரக தேர்தல் பட்டியலில் பதிவுசெய்யப்பட்ட பிரெஞ்சு குடிமக்களுக்கு, அவர்கள் வசிக்கும் நாட்டில் வாக்களிப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த வகையில் கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 4, 463 பிரெஞ்சு குடிமக்கள், இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். இவர்கள், தங்களது வாக்கினை வாக்குப்பெட்டியில் நேரடியாகவோ, ப்ராக்ஸி மூலமாகவோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது இணைய வழி மூலமாகவோ வாக்களிக்கலாம். வரும் ஞாயிற்றுக்கிழமை ஜூன் 5 முதல் சுற்று வாக்குப்பதிவு நடைபெறும். இதனையடுத்து ஜூன் 19ஆம் தேதி இரண்டாவது சுற்று வாக்களிக்க அழைக்கப்படுவார்கள். இந்தத் தேர்தலுக்காக புதுச்சேரியில் இரண்டு மையங்களும், சென்னை மற்றும் காரைக்காலில் தலா ஒரு மையங்கள் என 4 இடங்களில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்து, 6 தனித்தனி வாக்குச்சாவடிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த சட்டப் பேரவைத் தேர்தல் பிரதிநிதிக்காக, இந்தாண்டு முதல் சுற்றில் 8 அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பங்கேற்கின்றனர். இவர்களின் தேர்தல் அறிக்கைகள் இணையத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. புதுச்சேரியில் உள்ள பிரான்ஸ் துணைத்தூதரகம் மற்றும் சென்னையில் உள்ள பியூரோ டி பிரான்ஸ் ஆகிய நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளின் உதவியுடன், வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட, பிரெஞ்சு குடிமக்களுக்கான தேர்தலை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாண்டிச்சேரி செய்தியாளர் சக்திவேல்

VIDEOS

RELATED NEWS

Recommended