- முகப்பு
- மாவட்டச் செய்தி
- பாபநாசம் அருகே திருவைக்காவூர் மண்ணியாற்றில் தூர் வாரும் திட்டப் பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.
பாபநாசம் அருகே திருவைக்காவூர் மண்ணியாற்றில் தூர் வாரும் திட்டப் பணிகள் குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு.
ஆர்.தீனதயாளன்
UPDATED: May 10, 2023, 7:02:00 PM
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே திருவைக்காவூர் ஊராட்சியில் நீர்வளத்துறை சார்பில் மண்ணியாற்றில் 5 கிலோமீட்டர் அளவில் ரூ15.5 லட்சம் மதிப்பீட்டிலும், மண்ணியாற்றில் இருந்து பிரிந்து வரும் நீலத்தநல்லூர் பாசன வாய்க்கால் 5 கிலோமீட்டர் அளவில் ரூ 5.7 லட்சம் மதிப்பீட்டிலும் தூர்வாரும் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பணிகளை துரிதமாக முடிக்க வேண்டும் என அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின்போது நீர்வளத்துறை செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர் யோகேஸ்வரன், உதவி பொறியாளர் பூங்கொடி, பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி, மற்றும் பொதுப்பணித்துறை, வருவாய் துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.