• முகப்பு
  • கல்வி
  • 2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.

2023 ஆம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு.

ஆர்.தீனதயாளன்

UPDATED: May 30, 2023, 1:50:03 PM

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே இராஜகிரியில் 2023 ஆம் ஆண்டு பொதுத்தேர்வில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பாபநாசம் வட்டார அளவில் அதிக மதிப்பெண்களை பெற்ற பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு பாபநாசம் வட்டார ஜமாத்துல் உலமா சபை சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. 

விழாவில் பாபநாசம் பகுதிகளில் உள்ள 21, பள்ளிகளில் இருந்து 117 மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

இதில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பாபநாசம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதி அப்துல் கனி பரிசுகள்மற்றும் பதக்கங்களை வழங்கியும் பாராட்டுகளையும் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாணவ- மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பல கலந்து கொண்டனர்

VIDEOS

RELATED NEWS

Recommended