• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • விருதுநகர் மாவட்டம் கே. புதூர் மற்றும் தியாகராஜபுரம் கிராமத்தில் பொதுமக்கள்  ஆட்சியரிடம் மனு.

விருதுநகர் மாவட்டம் கே. புதூர் மற்றும் தியாகராஜபுரம் கிராமத்தில் பொதுமக்கள்  ஆட்சியரிடம் மனு.

அந்தோணி ராஜ்

UPDATED: Sep 9, 2024, 6:38:31 PM

விருதுநகர் மாவட்டம் 

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கன்னிச்சேரி புதூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கே. புதூர் மற்றும் தியாகராஜபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 1000 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் .

இந்த நிலையில் இந்த கிராமத்திற்கு நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் விடுவதால் பொதுமக்கள் காசு கொடுத்து தண்ணீர் வாங்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும்.

ஜல் ஜீவன் திட்டம்

மேலும் ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 28 லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் குழாய் பதித்து ஒரு வருடம் ஆன நிலையில் அதிலும் தண்ணீர் வரவில்லை என்றும்.

மேலும் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் குழாய் பதித்ததற்கு மேல் புதியதாக வாறுகால் அமைத்துள்ளதாகவும், இதனால் குழாயில் பழுது ஏற்பட்டால் சரி செய்ய முடியாத நிலைமை இருப்பதாகவும்,

Latest Virudhunagar News 

உடனடியாக இதனை சரி செய்து தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி கிடைக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கே.புதூர் மற்றும் தியாகராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த வார்டு மெம்பர்கள் பொதுமக்களுடன் சேர்ந்து இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

 

VIDEOS

Recommended