வேளாங்கண்ணி அருகே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தூத்துக்குடி  மீனவர் உயிரிழப்பு

செ.சீனிவாசன் 

UPDATED: Jul 28, 2024, 8:22:21 AM

நாகப்பட்டினம் மாவட்டம் 

தூத்துக்குடி மாவட்டம் தெரசாபுரம் துறைமுகத்தில் இருந்து கடந்த 23 ம் தேதி அருள் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் இயேசுநஸரன், செல்வன், ஜெயின், ஆண்டோ, ஜார்ஜ், பேதர் என்கின்ற பீட்டர் ஆகிய 6 நபர்கள் கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.

District News & Updates in Tamil 

இந்த நிலையில் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து 25 நாட்டிக்கல் தொலைவில் வேளாங்கண்ணி அருகே இன்று மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது பேதர் என்கின்ற பீட்டர் விசைப்படகில் இருந்து நிலைத் தடுமாறி கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.

தூத்துக்குடி மீனவர்கள் 

அவரை சக மீனவர்கள் மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் அவர் நெஞ்சுவலி காரணமாக சம்பவ இடத்திலயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து உயிரிழந்த மீனவரோடு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு தூத்துக்குடி மீனவர்கள் வந்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

District News Headlines in tamil

இதனை தொடர்ந்து நாகப்பட்டினம் கடலோர காவல் குழும போலீசார் உயிரிழந்த பீட்டரின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக ஒரத்தூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended