• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • நாகர்கோயிலில் இருந்து ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு செல்லும் சாலை பள்ளமாக இருப்பதால் மக்கள் அவதி.

நாகர்கோயிலில் இருந்து ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு செல்லும் சாலை பள்ளமாக இருப்பதால் மக்கள் அவதி.

முகேஷ்

UPDATED: Jul 23, 2024, 5:06:09 PM

கன்னியாகுமரி மாவட்டம்

நாகர்கோயிலில் இருந்து ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு நோயாளிகளோடு அவசர ஊர்தி உட்பட அனைவரும் செல்லும் பிரதான சாலை.

இந்த சாலையில் அனந்தன் பாலம் மற்றும் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு இடைபட்ட பகுதியில் இரண்டு இடங்களில் சாலை பல மாதமாக பழுதடைந்து தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலர் நிலைதடுமாறி விழுந்து எழுந்து செல்கிறார்கள்.

Latest Kanyakumari News

இது குறித்து சம்மந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலை பொறியாளர் அரவிந்திடம்  7339456162 என்ற எண்ணில் அழைத்து கேட்டால் TWAD Board தான் காரணம் TWAD Board AE யிடம் கேளுங்கள் என்று தனது கடமையை செய்யாமல் தட்டி கழிக்கிறார்.

தங்கள் கடமையை செய்யாத அலுவலர்களால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாக வேண்டியுள்ளது.

ஆகையால் மாவட்ட ஆட்சியர் , உயிர் சேதம் ஏற்படும் முன் இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதோடு சம்மந்தப்பட்ட பொறியாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை.

 

VIDEOS

Recommended