இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து. 

லட்சுமி காந்த்

UPDATED: Sep 29, 2024, 9:37:15 AM

காஞ்சிபுரம் மாவட்டம்

பெருநகர் ஊராட்சியில் இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பெருநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை வங்கியில் உள்ள ஏசியில் மின் கசிவு ஏற்பட்டு மின் சாதன பொருட்களில் தீப்பற்றி எரிய துவங்கியது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் உத்திரமேரூர் தீயணைப்பு துறைக்கு பெருநகர் காவல்துறையினர் புகார் அளித்தனர்.

புகாரின் பேரில் தீயணைப்பு படை வீரர்கள் மற்றும் பெருநகர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பாய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ மற்ற இடங்களுக்கு பரவாத வண்ணம் விரைந்து செயல்பட்டு தீயை முழுமையாக அணைத்தனர்

இந்த தீ விபத்தால் மின்சாரம் பொருட்கள் மட்டும் எரிந்து நாசமானது. மேலும் வங்கி கோப்புகள் உள்ளிட்ட அனைத்தும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றி வைக்கப்பட்டது. மேலும் இது குறித்து பெருநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றது.

 

VIDEOS

Recommended