• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • மறைந்த திமுக தலைவர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் பூண்டி கலைவாணன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

மறைந்த திமுக தலைவர் கலைஞரின் திருவாரூர் இல்லத்தில் பூண்டி கலைவாணன் அவரது திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

ஜெயராமன்

UPDATED: Jun 3, 2024, 6:48:20 PM

மறைந்த திமுக தலைவர் கலைஞர் 101 வது பிறந்தநாள் விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது இதன் தொடர்ச்சியாக திருவாரூர் சன்னதி தெருவில் உள்ள கலைஞர் இல்ல வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த திரு உருவ படத்திற்கு திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் மாலை அணிவித்து மழை தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து இல்லத்தில் உள்ள திருவுருவா படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் பணிமனை அலுவலகத்தில் நகரக் கழகம் சார்பில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு வேட்டி சேலை பிரியாணி வழங்கப்பட்டது .

இதன் தொடர்ச்சியாக இதன் தொடர்ச்சியாக பவித்திரமாணிக்கம் பகுதியில் தந்தை பெரியாரின் திரு உருவ சிலைக்கு பூண்டி கலைவாணன் மாலை அணிவித்தார் தொடர்ந்து அங்கு வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திரு உருவ படத்திற்கு மழை தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு இனிப்புகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது 

இதேபோல் காட்டூர் கலைஞர் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் கலைஞரின் திருவிழா படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கலைஞர் கோட்டத்தில் உள்ள கலைஞரின் திரு உருவ சிலைக்கு பூண்டி கலைவாணன் மலர் தூவி மரியாதை செலுத்தினார் பார்வையாளர்களுக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் வாரை பிரகாஷ் , கொரடாச்சேரி திமுக ஒன்றிய செயலாளர், பாலச்சந்தர் சேகர் என்கிற கலியபெருமாள், திருவாரூர் ஒன்றிய செயலாளர் தேவா மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

VIDEOS

RELATED NEWS

Recommended