ஒ.என்.ஜி.சி. ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு கார்ப்பரேஷன் சார்பில் மரக் கன்று நடும் விழா.

கார்மேகம்

UPDATED: Jul 12, 2024, 1:11:34 PM

Latest Ramanathapuram District News

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் ஒ.என்.ஜி.சி. ஆயில் மற்றும் இயற்கை எரிவாயு‌ கார்பரேஷன் சென்னை நிறுவத்தின் சார்பாக சுற்றுச் சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்  திருப்புல்லாணி யூனியன் அலுவலக வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது‌

இவ்விழாவில் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்‌ ச.புல்லாணி தலைமை தாங்கி மரக்கன்று நட்டு வைத்தார்.

News

திருப்புல்லாணி யூனியன் பீ.டி.ஓ. ராஜேஸ்வரி ஒ.என்.ஜி.சி. நிறுவன அசட் மேலாளர் தங்கமணி‌ மற்றும்‌ ஒ.என்.ஜி.சி. நிருவன அதிகாரிகள் கலந்து கொண்டனர் 

விழா முடிவில் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக மிதி வண்டி வழங்கப்பட்டன மற்றும் கோரைக் கூட்டம் கிராமத்திற்கு குடிநீர் வசதி செய்ய அதற்கான பூமி பூஜை நடைபெற்றது

இதில் ஏராளமான பொதுமக்கள் யூனியன் அலுவலர்கள் ஒ.என்.ஜி.சி. அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

 

VIDEOS

Recommended