மதிமுக 31 வது ஆண்டு தொடக்க விழா.

ஜெயராமன்

UPDATED: Jul 22, 2024, 8:47:08 AM

மதிமுக 31 வது ஆண்டு விழா

மதிமுக 31 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15 முதல் 31 ஆம் தேதி வரை மதிமுக கொடியினை ஏற்ற வேண்டும் என்று தலைமைக் கழகம் அறிவித்ததற்கு இணங்க இன்று திருவாரூர் மாவட்டம் முழுவதும் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது 

இந்நிகழ்ச்சியில் தலைமை கழகத்தால் அறிவிக்கப்பட்ட மாநில விவசாய அணி செயலாளர் வாரணாசி ராஜேந்திரன் அவர்கள் கலந்துகொண்டு கழகக் கொடியினை திருவாரூர் மாவட்ட செயலாளர் பி பாலச்சந்திரன் தலைமையில் ஏற்றி வைத்தார்.

Latest Thiruvarur District News

அதன் ஒரு பகுதியாக திருவாரூர் நகரக் கழகத்தின் சார்பில் பைபாஸ் ரவுண்டானா அருகில் கொடியேற்றி வைத்துவிட்டு தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு திருவாரூர் அருகே சேந்தமங்கலத்தில் திருவாரூர் ஒன்றிய கழகத்தின் சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கப்பட்டது 

இந்நிகழ்ச்சியில் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

VIDEOS

Recommended