நாகை அருகே பனங்குடி ஊராட்சியில் நாய்கள் கடித்து 16 ஆடுகள் சாவு .

செ.சீனிவாசன் 

UPDATED: Jun 6, 2024, 7:19:25 PM

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அருகே பனங்குடி ஊராட்சியை சேர்ந்தவர்கள் சேகுவாரா, சசிகலா, சரோஜா, ஜமுனாராணி, சிவச்சந்திரன், மஞ்சுளா மூர்த்தி விவசாயிகளான இவர்கள் வயலில் தனது ஆடுகளை மேய விட்டுள்ளனர்.

பின்னர் வெயிலின் காரணமாக மதிய நேரத்தில் வீட்டில் இருந்துள்ளனர். பின்னர் அவர்கள் வயலுக்கு சென்று ஆடுகளை பார்த்த போது தலை மற்றும் உடல்களில் பலத்த காயம் ஏற்பட்டும் 16 ஆடுகள் செத்து கிடந்தன. அப்போது அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது.

இந்த நிலையில் பனங்குடி ஊராட்சி பகுதியில் வீடுகளில் உரிமம் இல்லாமல் நாய்கள் வளர்ப்பவர்கள் அதற்கு அசைவ உணவுகளையே உணவாக வழங்குகின்றனர்.

அவ்வாறு சில சமயங்களில் அசைவ உணவு வழங்காத நேரத்தில், அந்த நாய்கள் இதுபோன்று வயலில் மேயும் ஆடுகளை கடித்து குதறி செல்கின்றன என்ன பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றன.

எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

 

VIDEOS

Recommended