• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மூவருக்கு மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநில இளைஞர் உயிரிழப்பு. 

சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மூவருக்கு மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநில இளைஞர் உயிரிழப்பு. 

நெல்சன் கென்னடி

UPDATED: Jun 10, 2024, 10:54:03 AM

சென்னை துரைப்பாக்கம் பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் உதவியாளர் மற்றும் ஹவுஸ் கீப்பிங் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் உணவகத்தை மூடுவதற்கு முன்பு உயிரிழந்த திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 24 வயதான தன்குமார், 22 வயதான அமென்ரா தீப்பர்மா, 33 வயதான சுகுமார் தீப்பர்மா ஆகிய மூவரும் உணவகத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தனர். 

உணவகத்தில் உள்ள குளிர்சாதன பேட்டி அருகே சுத்தம் செய்தபோது திடீரென தன்குமார் மீது மின்சாரம் பாய்ந்ததும் நிலைகுழந்து கீழே விழுந்துள்ளார். 

இதை பார்த்த உடன் பணிபுரிந்து வந்த அமென்ரா தீப்பர்மா, சுகுமார் தீப்பர்மா இருவரும் தன்குமாரை காப்பாற்ற முயன்றபோது அவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்தது. 

இதை பார்த்த சக ஊழியர்கள் உடனே மின்சாரத்தை துண்டித்துவிட்டு மின்சாரம் பாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மூவரையும் மீட்டு பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூவரையும் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார்கள்.

அங்கு மூவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் தன்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக கூறியுள்ளார்.  

மேலும் மற்ற இருவருக்கும் மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளித்த பின்பு தற்போது நலமாக உள்ளார்கள்.

உயிரிழந்த தன்குமார் உடலை சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

VIDEOS

Recommended