ஆற்காட்டில் பட்டதாரி வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

பரணி

UPDATED: Sep 2, 2024, 1:28:02 PM

இராணிப்பேட்டை மாவட்டம்

ஆற்காடு தமிழ் நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி 1ல் வசித்து வருபவர் ஜெயபிரசாந்த் இவர் சென்னையில் தனியார் கம்பெ னியில் வேலை செய்து வருகிறார் வாரத்திற்கு ஒருமுறை ஆற்காடு வருவதாக தெரிகிறது.

இவரது தம்பி கிஷோர் குமார் 25 பி.காம் பட்டதாரியான இவர் வேலையில்லாமல் வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார். வேலை இல்லை என்பதாலும் தனியாக இருந்து வந்ததாலும் மன உளைச்சல் அதிகமாக உள்ளது.

இந்நிலையில் இவரது அண்ணன் ஜெயபிரசாந்த் வேலையை முடித்து விட்டு சென்னையிலிருந்து ஆற்காடு வந்துள்ளார். ஆற்காடு பஸ் நிலையத்தில் இருந்து தன்னை அழைத்துச் செல்வதற்காக கிஷோர் குமாருக்கு போன் செய்துள்ளார்.

தற்கொலை

அவர் எடுக்காததால் வீட்டுக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது கிஷோர் குமார் புடவையின் மூலம் மின் வீசிரியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் இது குறித்து ஆற்காடு நகர போலீசில் புகார் செய்தனர். 

அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

VIDEOS

Recommended