பங்குச்சந்தையின் குறியீட்டை உடைத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

கார்மேகம்

UPDATED: Aug 2, 2024, 1:06:06 PM

இராமநாதபுரம்

முகமது சதக் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 31/07/2024 புதன்கிழமை அன்று வருவாய்த் திறனை வெளிக் கொணர பங்குச்சந்தையின் குறியீட்டை உடைத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இவ்விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது இவ்விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எம்.மீரா தலைமை தாங்கினார் விழா சிறப்பு விருந்தினராக எடிட் பை எடிட்டர் நிறுவன இயக்குனர் பிரபாகரன் கலந்து கொண்டு மாணவிகளிடம் பங்குச்சந்தை நிலவரங்கள் குறித்தும்

பங்குச்சந்தை

பங்குச்சந்தையில் உள்ளீடு செய்வது எவ்வாறு அதிக வருமானம் எப்படிப் பெறலாம் என்றும் தங்கத்தை எவ்வாறு பங்குச்சந்தையில் உள்ளீடு செய்வது என்றும் பங்குச்சந்தையில் வேலை வாய்ப்பு குறித்தும் பல்வேறு விழிப்புணர்வுகளை மாணவிகளுக்கு வழங்கினார்.

Ramanathapuram District News in Tamil

இவ்விழாவினை வணிகவியல் துறை தலைவர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்

விழாவில் 500 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் நாட்டுப்பன்னுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.

 

VIDEOS

Recommended