தினம் ஒரு திருக்குறள் 22-04-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Apr 21, 2024, 4:12:21 PM

குறள் 123:

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.

மு.வரதராசன் விளக்கம்:

அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.

சாலமன் பாப்பையா விளக்கம்:

அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.

கலைஞர் விளக்கம்:

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

English Couplet 123:

If versed in wisdom's lore by virtue's law you self restrain

Your self-repression known will yield you glory's gain

Couplet Explanation:

Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise

Transliteration(Tamil to English):

seRivaRindhu seermai payakkum aRivaRindhu

aatrin adangap peRin

VIDEOS

Recommended