- முகப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு திருக்குறள் 22-04-2024
தினம் ஒரு திருக்குறள் 22-04-2024
தினம் ஒரு திருக்குறள்
UPDATED: Apr 21, 2024, 4:12:21 PM
குறள் 123:
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.
மு.வரதராசன் விளக்கம்:
அறிய வேண்டியவற்றை அறிந்து, நல்வழியில் அடங்கி ஒழுகப்பெற்றால், அந்த அடக்கம் நல்லோரால் அறியப்பட்டு மேன்மை பயக்கும்.
சாலமன் பாப்பையா விளக்கம்:
அடக்கத்துடன் வாழ்வதே அறிவுடைமை என்று அறிந்து, ஒருவன் அடக்கமாக வாழ்ந்தால் அவனது அடக்கம் நல்லவர்களால் அறியப்பட்டு அது அவனுக்குப் பெருமையைக் கொடுக்கும்.
கலைஞர் விளக்கம்:
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
English Couplet 123:
If versed in wisdom's lore by virtue's law you self restrain
Your self-repression known will yield you glory's gain
Couplet Explanation:
Knowing that self-control is knowledge, if a man should control himself, in the prescribed course, such self-control will bring him distinction among the wise
Transliteration(Tamil to English):
seRivaRindhu seermai payakkum aRivaRindhu
aatrin adangap peRin