- முகப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு திருக்குறள் 20-04-2024
தினம் ஒரு திருக்குறள் 20-04-2024
தினம் ஒரு திருக்குறள்
UPDATED: Apr 19, 2024, 6:15:40 PM
குறள் 122:
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு.
மு.வரதராசன் விளக்கம்:
அடக்கத்தை உறுதிப் பொருளாகக் கொண்டு போற்றிக் காக்க வேண்டும். அந்த அடக்கத்தைவிட மேம்பட்ட ஆக்கம் உயிர்க்கு இல்லை.
சாலமன் பாப்பையா விளக்கம்:
அடக்கத்தைச் செல்வமாக எண்ணிக் காக்க; அதைக் காட்டிலும் பெரிய செல்வம் வேறு இல்லை.
கலைஞர் விளக்கம்:
மிக்க உறுதியுடன் காக்கப்படவேண்டியது அடக்கமாகும். அடக்கத்தைவிட ஆக்கம் தரக் கூடியது வேறொன்றும் இல்லை.
English Couplet 122:
Guard thou as wealth the power of self-control;
Than this no greater gain to living soul
Couplet Explanation:
Let self-control be guarded as a treasure; there is no greater source of good for man than that
Transliteration(Tamil to English):
kaakka poruLaa adakkaththai aakkam
adhaninoounG killai uyirkku