தினம் ஒரு திருக்குறள் 28-04-2024

தினம் ஒரு திருக்குறள்

UPDATED: Apr 28, 2024, 6:48:16 AM

தினம் ஒரு திருக்குறள் 

குறள் 129:

தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே

நாவினாற் சுட்ட வடு.

மு.வரதராசன் விளக்கம்:

தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.

சாலமன் பாப்பையா திருக்குறள்விளக்கம்:

ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.

கலைஞர் திருக்குறள் விளக்கம்:

நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.

English Couplet 129:

In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;

In soul by tongue inflamed, the ulcer healeth never more

Couplet Explanation:

The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal

Transliteration(Tamil to English):

theeyinaar suttapun ullaarum aaraadhae

naavinaal sutta vadu

VIDEOS

Recommended