- முகப்பு
- தினம் ஒரு திருக்குறள்
- தினம் ஒரு திருக்குறள் 28-04-2024
தினம் ஒரு திருக்குறள் 28-04-2024
தினம் ஒரு திருக்குறள்
UPDATED: Apr 28, 2024, 6:48:16 AM
தினம் ஒரு திருக்குறள்
குறள் 129:
தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு.
மு.வரதராசன் விளக்கம்:
தீயினால் சுட்ட புண் புறத்தே வடு இருந்தாலும் உள்ளே ஆறிவிடும்; ஆனால் நாவினால் தீய சொல் கூறிச் சுடும் வடு என்றும் ஆறாது.
சாலமன் பாப்பையா திருக்குறள்விளக்கம்:
ஒருவனை மற்றொருவன் தீயால் சுட்ட புண் உடம்பின்மேல் வடுவாக இருந்தாலும் உள்ளத்துக் காயம் காலத்தில் ஆறிப்போய்விடும். ஆனால் கொடிய வார்த்தைகளால் நெஞ்சைச் சுட்ட வடு அதில் புண்ணாகவே கிடந்து ஒரு நாளும் ஆறாது.
கலைஞர் திருக்குறள் விளக்கம்:
நெருப்பு சுட்ட புண்கூட ஆறி விடும்; ஆனால் வெறுப்புக் கொண்டு திட்டிய சொற்கள் விளைத்த துன்பம் ஆறவே ஆறாது.
English Couplet 129:
In flesh by fire inflamed, nature may thoroughly heal the sore;
In soul by tongue inflamed, the ulcer healeth never more
Couplet Explanation:
The wound which has been burnt in by fire may heal, but a wound burnt in by the tongue will never heal
Transliteration(Tamil to English):
theeyinaar suttapun ullaarum aaraadhae
naavinaal sutta vadu