• முகப்பு
  • வணிகம்
  • பிரபல நகைக்கடை புதிய கிளையை நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்தார்.

பிரபல நகைக்கடை புதிய கிளையை நடிகை ஆண்ட்ரியா தொடங்கி வைத்தார்.

அசோக்

UPDATED: Feb 13, 2024, 7:29:17 PM

ஜெயந்திலால் சல்லானி குழுமத்தின் லில்லே பை சல்லானியில் மெலிதான எடையில் அனைவருக்கும் ஏற்ற விலையில் நவ நாகரீக ஆபரணங்கள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

பெண்மையை போற்றும் விதமாகவும் அனைத்து பெண்களும் வைர நகைகள் அணிய வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டுள்ள "லில்லே பை சலானி" யில் 16 வயது முதல் 34 வயது வரை உள்ள அனைத்து நவநாகரிக மங்கையர்களுக்கு என்று பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆபரணங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.   

தங்க , வைர நகைகள் சல்லானி குழுமத்தால் வடிவமைக்கப்பட்டு, தயாரித்து விற்பனை செய்யப்படுவதால் குறைந்த விலையில், நிறைந்த தரத்துடன் அனைவராலும் வாங்க முடிந்த வகையில் உள்ளன.

குறிப்பாக, இலகுரக காதணிகள், செயின்கள், வளையல்கள், பெண்டன்ட்களை தினமும், எங்கேயும் எப்போதும் அணியும் வகையில் 18 காரட் தங்கத்திலும் 18 காரட் வைரத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நகையும் நேர்த்தி, துடிப்பு, தைரியம், தனித்துவம் மற்றும் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையிலும், பெண்கள் மட்டுமின்றி ஆடவரும் அணியக்கூடிய பிரேஸ்லெட்கள், செயின்கள், மோதிரம் உள்ளிட்டவையும்

மேலும் குழந்தைகள் மற்றும் சிறுவர், சிறுமியர் அணியக்கூடிய செயின்கள், வளையல்கள், பெயர் பதித்த மோதிரம் என்று எண்ணற்ற டிசைன்கள் உள்ளன. மேலும் வாடிக்கையாளர்கள் விரும்பும் விதமாக அவர்கள் எண்ணம்போல் தயாரித்தும் வழங்கப்படுகிறது. 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கடை உரிமையாளர் ஜெயந்திலால் சல்லானி, லி பை சல்லானியின் நகைகள் அனைத்தும் அரசாங்க சான்று மற்றும் BIS ஹால்மார்க் தர முத்திரை பெற்றது என்றும்,

 அனைத்து வைர நகைகளும் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் பிரபலமாக இயங்கி வரும் உலக பிரசித்தி பெற்ற SGL (Solitaire Gemological Laboratory) நிறுவனத்தால் தர சான்றிதழ் பெறப்பட்டது என்றும் கூறினார். 5000 ரூபாய் முதல் ஒரு லட்சம் வரையிலான மெல்லிய எடை கொண்ட நகைகளை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் நவ நாகரீக அணிகலன்கள் அனைவரையும் என்றடைய வேண்டும் என்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி ஜுவல்லரியை தொடங்கி வைத்த நடிகை ஆண்ட்ரியா, தான் ஒரு புகழ்பெற்ற பிரபலமாக இங்கு வரவில்லை, வாடிக்கையாளராக வந்துள்ளேன் என்று கூறினார்.

சல்லானியை நீண்ட நாட்களாக தெரியும் என்றும், அவர்களது பாரம்பரிய நகைகள் புகழ்பெற்றவை என்றும் கூறிய அவர், அது போன்ற நகைகளை அணியும்போது கலாச்சார அடிப்படையில் உடுத்தினால் தான் நன்றாக இருக்கும் என்றார்.

தற்போது லில்லே பை சல்லானில் உள்ள நகைகள் எல்லா விதமான நவ நாகரீக ஆடைகளுக்கு ஏற்ற வகையில் பல்வேறு டிசைன்களில் நகைகள் உள்ளன என்றார்.

மேலும் இவற்றை பயப்படாமல் எங்கும் அணிந்து செல்லலாம் என்று கூறிய ஆண்ட்ரியா சல்லானி குழுமத்தின் இந்த பிரத்யேக மற்றும் புதியரக நகைகள் வடிவமைப்பை பாராட்டினார். 

சென்னை VR மாலின் தரை தளத்தில் தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய கிளை லி பை சல்லானி திறப்பு விழாவை முன்னிட்டு வைரங்கள் காரட் ஒன்றுக்கு ரூ. 5000 தள்ளுபடி மற்றும் நகைகள் வாங்கும் அனைவர்க்கும் ஒரு வெள்ளி பரிசு அறிவித்துள்ளது சல்லானி நிறுவனம்.

VIDEOS

Recommended