• முகப்பு
  • இலங்கை
  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் 

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் 

வவுனியா

UPDATED: Jul 30, 2024, 7:00:59 AM

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

வவுனியா பழைய பேருந்து நிலையத்துக்கு முன்பாக வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது காலம் தாமதிக்காது சர்வதேச நீதி கிடைக்க வேண்டும், தமக்கு நிதி தேவையில்லை நீதியே தேவை, காணாமல் ஆக்கப்பட்டோரை கண்டுபிடித்து தர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பியதோடு பதாதைகளையும் தாங்கி இருந்தனர்.

 

VIDEOS

Recommended