• முகப்பு
  • இலங்கை
  • மொஹொமட் ரிஸ்வி உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

மொஹொமட் ரிஸ்வி உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: May 9, 2024, 5:59:19 PM

நீர்கொழும்பு - கொச்சிக்கடையை பிறப்பிடமாகவும், மினுவாங்கொடையை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.ஆர். மொஹொமட் ரிஸ்வி, உயர் நீதிமன்றத்தில் பிரதம நீதியரசர் முன்னிலையில், வியாழக்கிழமை சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.

  இவர், மிகவும் ஆளுமை மிக்க நீதிமன்ற உரை மொழி பெயர்ப்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

  நீர்கொழும்பு - அல் ஹிலால் மத்திய கல்லூரி மற்றும் நீர்கொழும்பு லொயோலா கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார்.

   இவர், நீர்கொழும்பு கொச்சிக்கடையைச் சேர்ந்த மர்ஹூம் மொஹமட் ரிஷாத் - சித்தி ஜெஸீமா தம்பதியினரின் புதல்வருமாவார்.



 

VIDEOS

Recommended