வெடுக்குநாறிமலை பூசாரி வைத்தியசாலையில் அனுமதி

வவுனியா

UPDATED: Mar 21, 2024, 8:11:31 AM

வவுனியா வெடுக்குநாறிமலையின் பிரதான பூசாரியான தம்பிராசா மதிமுகராசா சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read : மலையக தியாகிகள் தினம் மற்றும் 4ஆவது உலக தமிழாராச்சி மாநாட்டு படுகொலை 50ஆவது ஆண்டு நினைவேந்தல்கள்-40

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று பொலிசாரின் வன்முறையால் ஆலயபூசகர் உள்ளிட்ட 8 பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் கடந்த 19 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

Also Read : நாட்டைக் கட்டியெழுப்ப கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் வர்த்தக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்

இந்நிலையில் குறித்த எட்டுப்பேரையும் விடுதலைசெய்து வவுனியா நீதிமன்று நேற்றுமுன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் விடுதலையான ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்தநிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்று அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Also Read : அச்சுவேலி தோப்பு நவக்கரி உள்ளிட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு பரிசோதனை

அவர் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5நாட்கள் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

VIDEOS

RELATED NEWS

Recommended