3000 கோடி ரூபா செலவில் கண்டியில் போக்குவரத்து முனையம். 

கண்டி - ஜே.எம். ஹாபீஸ்

UPDATED: Jan 29, 2024, 9:57:40 AM

நீண்டகாலமாக கண்டி நகரில் கைவிடப்பட்டிருந்த கண்டி நகர மல்டி மொடல் போக்குவரத்து முனையம் (kandy multimodale transit terminal) 3000 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்பட உள்ளது அணமையில் அது ஆரம்பித்து வைக்கப்பட்டது.
உலக வங்கியின் கடன் திட்டத்தின் கீழ் இது மேற்கொள்ளப்பட உள்ளது. பெருந்தெருக்கள், போக்குவரத்து, ஊடகத் துறை அமைச்சர் கலாநிதி பந்துல குனவர்தன் இதனை ஆரம்பித்து வைத்தார். இவ்வைபவம் மத்திய மாகாண ஆளுநர் லலித் யூகமகே தலைமையில் இடம் பெற்றது. 

இதன் பிரதான நோக்கம் கண்டி நகரில் பல்வேறு இடங்களில் காணப்படும் வாகன மற்றும் பஸ், புகையிரத சேவைகளை ஓரிடத்திற்கு கொண்டவருவதாகும். 2018ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட இருந்த இத்திட்டம் ஆட்சி மாற்றத்தின் நாட்டில் ஏற்பட்ட பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக மேற்படி திட்டம் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்டுது. இதனால் கண்டி நகரில் பஸ்வண்டிகளுக்காக வெளியில் இருந்து வருபவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே மேற்படி திட்டம் ஆரம்பிக்கப்பட்டமை பொதுமக்கள் பெற்ற பாரிய வெற்றி என ஆளுநர் குறிப்பிட்டார்.

கண்டி வில்லியம் கொபல்லவ மாவத்தை மற்றும் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை என்பவற்றிற்கு இடையே கண்டி புகையிரத நிலையம் அமைந்துள்ள பிரதேசத்தில் 200 மீட்டர் நீளத்தில் மேம் பாலம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. ஒரே கூறையின் கீழ் மேற்படி புகையிரத நிலையம், பஸ் தரிப்பிடம் என்பன அமையவுள்ள.

இத்திட்டம் தற்போது கண்டியில் இடம் பெறும் பஸ் சேவைகளை 5000 பஸ்சேவைகளாக உயர்த்த முடியும் என்றும் அங்கு தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக 330000 பயணிகளுக்கு போக்குவரத்தை மேற்கொள்ள வசதி அளிக்கப்படும். இவ்வேலைத்திட்டம் 2026 டிசம்பர் மாதம் நிறைவடைய உள்ளது. அத்துடன் மேற்படி முனையம் 3 மாடிகளைக் கொண்டதாக அமையும்.

VIDEOS

RELATED NEWS

Recommended