• முகப்பு
  • இலங்கை
  • இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் 42 ஆவது வருட நிகழ்வு பெப்ரவரி 14

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் 42 ஆவது வருட நிகழ்வு பெப்ரவரி 14

அஷ்ரப் ஏ சமத்

UPDATED: Feb 11, 2024, 9:48:19 AM

இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் 42 ஆவது வருட நிகழ்வு பெப்ரவரி 14 நள்ளிரவில் பௌத்த மத பிரித் நிகழ்வுடன் ஆரம்பமாகி 15ஆம் திகதி 42வது ஆண்டு விழா நிகழ்வுகள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்படும்.. இந் நிகழ்வின்போது லேக் ஹவுஸ் நிறுவனத்துடன் விளம்பர ஒப்பந்தமொன்றும் லேக் ஹவுஸ் அதிகாரிகளுடன் கைச்சாத்திடப்படும் அத்துடன் இலங்கை ரூபவாஹினி, நேத்ரா ,ஜ சனல் ஆகிய மூன்று அலைவரிசையிலும் வெப்தளம் ஊடகா வானொலி நேரடி ஒலிபரப்பு ஒன்றும் ஆரம்பிக்கப்படும். என இலங்கை ருபவாஹினிக் கூட்டுத்தபானத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊகடவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார்.

ரூபவாஹினி 42வது ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ருபவாஹினி கூட்டுத்தாபணத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் சமரசிங்க மேற்கண்ட தகவல்களைத் தெரிவித்தார். இம் மாநாட்டின்போது கபில தசநாயக்க பிரதிப் பணிப்பாளர், சதிஸ் நீலகண்டன் சநதைப்படுத்தல் முகாமையாளரும் கலந்து கொண்டனர்

இங்கு மேலும் கூட்டுத்தபாணத்தின் தலைவர் தகவல் தருகையில் 

லேக் ஹவுஸ் விளம்பர பீடம் பத்திரிகையில் விளம்பரமெடுக்கும்போது சிறிய விளம்பரம் கூட தொலைக்காட்சியில் நிகழ்சிகளின் போது திரையிடும் போது கீழ் தளத்தில் எழுத்துவடிவில் அல்லது படத்தடன் விளம்பரங்களை காட்சிப்படுத்த விரும்பினால் அதற்கான விளம்பரங்களையும் லேக் ஹவுஸ் நிறுவனம் அதற்கான கட்டனத்தினை அறவிட்டு ருபாவாஹினிக்கு அனுப்ப்பட்டு அவைகள் தொலைக்காட்சியின் நிகழ்ச்சியின் போது கீழ் எழுத்து வடிவில் விளம்பரப்படுத்தக் கூடிய வசதிகள் செய்து கொள்ளப்பட்டுள்ளன. அத்துடன் சகல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் வெப் ரேடியோ ஊடாகவும் ஒலிபரப்படும்.

நேத்ரா தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கொழும்பில் நடைபெறும் இசை. கலை நிகழ்ச்சிகளை நேரடியாக ஒலிபரப்படும். அதற்கான அனுசரனைகளைப் பெற்றுள்ளன. அத்துடன் எதிர் காலத்தில் வட கிழக்கு பிரதேசங்களுக்குச் சென்று அங்கு சில நிகழ்வுகளை நேரடியாக ஒலிபரப்படும் அத்துடன் எதிர்வரும் நோன்பு காலத்தில் நோன்பு நிகழ்வுகளையும் மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களிலும் ஒளிபரப்படும்.

அத்துடன் ருபவாஹினி பிரிலான்ஸ் எனனும் நிகழ்ச்சி சனிக்கிழமைகளில் 04.30க்கு ஒளிப்பரப்படுகின்றது. இந் நிகழ்ச்சியான தொழில் பயிற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களுக்கு தொலைக்காட்சி ஊடாக நிகழ்ச்சிகளை நடாத்தி கிராமங்களில் உள்ள இளைஞா்கள் பாடசாலை விட்டு விலகிய மாணவர்களை பதிவு செய்து அவர்கள் மரவேலையாளர் , மின்னியல் இணைப்பாளர் போன்ற பயிற்சியளித்து அவர்களை என்.வி.கியு 3 சான்றிதழ் உடன் அவர்களை தொழிற்பயிற்சித்துறையில் பயிற்சியளித்துள்ளது. இதுவரை 44ஆயிரம் இளைஞர்கள் நன்மையடைந்துள்ளனர் சிலர் இத்துறையில் வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர். கம்பஹா மாவட்டத்தினை முற்றுப் பெற்றுள்ளது அடுத்த குருநாகல் பிரதேசங்களுக்கும் சென்று இந் நிகழ்ச்சி ஒளிபரப்பபடும்.

சுயதொழிலாளர்கள் மற்றும் சிறிய தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளவர்களை இனம் கண்டு அவர்களை நேரடியாக பேட்டி கண்டு அவர்களது தொழிற்சாலைகள் பயிற்சிகளை யும் ஊடககமளிதத்து சிறிய முகாமைத்துவ தொழில் வல்லுனர் (எஸ்.எம். ஈ) ஊடாக அவர்களையும் இலங்கை ரூபாவாஹினிக் கூட்டுத்தாபணம் பயிற்சியளித்து அவர்களுக்கான கடன் வசதிகளை வழங்கி அத்துறையினர்களுக்கு ம தேவையான பயிற்சிகளையும் வழங்குகின்றோம் அத்துடன் பொதுமக்கள் சம்பந்தமான பிரயோசனமான சமுக பொருளாதார தொழல் முயற்சியான நிகழ்ச்சிகளை நாம் வழங்கி வருகின்றோம். அத்துடன் தற்பொழுது அரசாங்க செய்திகள் மட்டுமல்லாது எதிர்கட்சிகளது கூட்டங்கள் ஆரப்பாட்டங்கள் கொண்ட நடுநிலையான செய்திகளையும் ஒலி ஒளிபரப்பபடுகின்றது

கடந்த காலங்களில் கிறிக்கெட் விளையாட்டி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிஒலிபரப்புவதற்காக கூடுதலான கேள்வி உள்ளன அதனால் எமது நிறுவனத்திற்கு போட்டி போடக்கூடிய பணம் கிடைக்காமல் உள்ளது எனவும் கிறிக்ட் சபை கூடுதலான கேள்வி உள்ளவர்களுக்கே கிறிக்கெட் நேரடி ஒலிபரப்பினை வழங்குகின்றது. இதனால் எமது நிலையத்திற்கு அவைகள் கிடைப்பதில்லை எனவும் தலைவர் ஊடகவியலாளர் மத்தியில் தெரவித்தார்.

VIDEOS

RELATED NEWS

Recommended