• முகப்பு
  • இலங்கை
  • யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை தொடர்பாக யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை தொடர்பாக யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வாதப்பிரதி வாதம்

யாழ்ப்பாணம் - டி.பிரதீபன்

UPDATED: May 31, 2023, 6:38:26 PM

 யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பாக இன்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன

பாராளுமன்ற உறுபபினர்களான சிவஞானம் சிறிதரன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செல்வராசா கஜேந்திரன் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் இடையே வாதப்பிரதி வாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த விடயம் பிழையானதுதான்.ஆனால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது எனவே இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசுவோம் எனக் கருத்து தெரிவித்தார்

எனினும் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் கடந்த காலத்தில் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் விகாரை அமைக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றியதாக கூறினர். எனவே தீர்மானத்தை பார்த்து பரிசீலிப்பதாகவும் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும் கருத்து தெரிவித்தார்.

RELATED NEWS

Recommended