• முகப்பு
  • district
  • இது அதிகாரிகளின் கவன குறைவா? அல்லது பணியாளர்களின் அலட்சியப் போக்கா?

இது அதிகாரிகளின் கவன குறைவா? அல்லது பணியாளர்களின் அலட்சியப் போக்கா?

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சியில் அரசு அதிகாரிகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. ""வேலியே பயிரை மேய்வதா"" நேற்று முன்தினம் பேரூராட்சி அதிகாரிகளின் முயற்சியால் பேரூராட்சி பணியாளர்களால் குப்பைகளை தீலிட்டு கொளுத்தப்பட்ட இடத்தில் உள்ள குப்பைகளை அகற்றி வேறு யாரும் குப்பை கொட்ட கூடாது என்பதற்காக குழி தோண்டி வண்டி வாகனங்கள் செல்லாமல் தடுக்கப்பட்டது. ஆனால் பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்களே மறுபடியும் அதே இடத்தில் குப்பைகளை கொட்டுகிறார்கள் சுகாதார சீர்கேடுகளை தடுக்க வேண்டிய பேரூராட்சியே சுகாதாரமற்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. இது அதிகாரிகளின் கவன குறைவா? அல்லது பணியாளர்களின் அலட்சியப் போக்கா? இந்த செயலுக்கு யார் பொறுப்பு? தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதி 1973 படி செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி உதவி இயக்குனர் இதற்கு நடவடிக்கை எடுப்பார்களா?என கேள்வி கேட்கும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும். செய்தியாளர் பாஸ்கர்

RELATED NEWS

Recommended