• முகப்பு
  • இலங்கை
  • தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுகம்

தென்கிழக்கு பல்கலைக்கழக சர்வதேச ஆய்வரங்கு நுழைவுச்சீட்டு அறிமுகம்

கல்முனை - யூ. எம். இஷ்ஹாக்

UPDATED: Feb 26, 2024, 6:14:56 PM

எதிர்வரும் 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள 12 ஆவது சர்வதேச ஆய்வரங்கு மாநாட்டுக்கான நுழைவுச்சீட்டுக்களை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வும் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்கிவைக்கும் நிகழ்வும் பல்கலைக்கழக நினைவுச் சின்னத்திற்கு முன்பாகவுள்ள திறந்த வெளியில் இடம் பெற்றது.

மாநாட்டின் இணைப்பாளர் பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இவ் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது.

Also Read.முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டம்

உள்ளூர் தனியார் துறை நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்கலைக்கழக பீடாதிபதிகள், நூலகர், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் விரிவுரையாளர்கள் பிரதி நிதியாளர் என பலரும் கலந்து கொண்டிருந்த நிகழ்வுக்கு உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர்  பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 2024.02.29 ஆம் திகதி இடம்பெறவுள்ள “Digital Transformation for a Sustainable Future” எனும் தொனிப்பொருளிலான குறித்த 12 ஆவது சர்வதேச ஆய்வரங்குக்கு இடம் பெறுகின்றது.
பிரித்தானியாவின் Gloucestershire பல்கலைக்கழகத்தின் Head of School of Computing and Engineering பேராசிரியர் கமால் விச்கோம் அவர்கள் பிரதான பேச்சாளராக கலந்து கொள்ளவுள்ளார்.

Also Read.இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு

குறித்த மாநாட்டில் 200 ஆராச்சி கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VIDEOS

RELATED NEWS

Recommended