• முகப்பு
  • இலங்கை
  • தலைமைத்துவத்திற்கான வேட்பாளர்களிடையே சமரசம் இன்றி முடிவுற்ற பேச்சு

தலைமைத்துவத்திற்கான வேட்பாளர்களிடையே சமரசம் இன்றி முடிவுற்ற பேச்சு

வவுனியா

UPDATED: Jan 12, 2024, 2:36:34 AM

தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தரின் இல்லத்தில் இடம் பெற்ற போது திட்டமிட்டபடி தமிழரசு கட்சியினுடைய தலைமைத்துவத்திற்கான தேர்தல் இடம்பெறும் என முடிவு எட்டப்பட்டுள்ளதாக கட்சியின் செயலாளர் தெரிவித்தார். 

இதேவேளை கட்சியினுடைய தலைமைத்துவத்திற்கான தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் மூவர் தலைமைத்துவத்துக்காக போட்டியிட இருப்பதினால் வேட்பாளர்களிடையே சமரசத்தை ஏற்படுத்தி எவரேனும் ஒருவர் ஏகமனதாக தலைவராக தெரிவு செய்யப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என கூறப்பட்டதற்கு அமைய இன்றைய தினம் வேட்பாளராக போட்டியிடும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம் ஏ சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சி. ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் ஆகியோர் கொழும்பில் சந்தித்து கலந்துரையாடிய நிலையில் மூவருக்கும் இடையில் சமரசம் ஏற்படாமையால் மூவரும் தலைமைத்துவத்திற்காக போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

 

VIDEOS

RELATED NEWS

Recommended