பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியாவில் ஊழியர்கள் போராட்டம்!!
வவுனியா
UPDATED: Jan 11, 2024, 9:53:57 AM
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
வவுனியா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று காலை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டது போல தமக்கும் சம்பளம் அதிகரிப்பு வழங்கப்படுவதுடன் , ஊழியர் பற்றாக்குறையினை உடன் நிவர்த்திசெய்து ,எமது வாழ்வாதாரப்பிரச்சினையினை தீர்க்குமாறு போராட்டக்காறர்கள் தெரிவித்தனர்.