சாப்பிட வரச் சொல்லி சரமாரியாக வெட்டிக் கொலை .
THE GREAT INDIA NEWS
UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM
காதலி வீட்டினர் கொடூரம்.
காதலுக்கு எதிர்ப்புதெரிவித்து வந்தநிலையில் இருவரும் வீட்டை விட்டும் ஓடிச்சென்றுவிட்டார்களே என கடும் ஆத்திரத்தில் இருந்தவர்கள் திரும்பவும் வீட்டிற்குவந்ததும் ஆத்திரத்தைத் தீர்த்துக்கொள்ள இளைஞரிடம் சமாதானமாக பேசி சாப்பிட வரச்சொல்லி சரமாரியாக வெட்டிகொலை செய்துள்ளனர் .
மகாராஷ்டிரா மாநிலத்தில் பண்டாராமாவட்டத்தில் தும்சார் பகுதியைச் சேர்ந்தவர் சச்சின் (24) இந்த இளைஞர் அதே பகுதியை சேர்ந்த (21 ) இளம்பெண்ணை காதலித்து வந்திருக்கிறார்.
இந்த காதலுக்கு பெண்வீட்டில் எதிர்ப்பு இருந்திருக்கிறது.
எதிர்ப்பைமீறி இருவரும் காதலித்து வந்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27 ம் தேதி அன்று சச்சினும் அந்த இளம்பெண்ணும் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்.
இதனால் தங்களதுமகளை காணவில்லை என்றுபல இடங்களில் தேடிப்பார்த்து இருக்கிறார்கள் .
சச்சினும் காணவில்லை என்பதால் காதலர்கள் இருவரும் வீட்டைவிட்டு ஓடிச்சென்று விட்டார்கள் என்றுகடும் ஆத்திரத்தில் இருந்திருக்கிறார்கள் பெண்வீட்டார்.
இந்நிலையில் மூன்றுதினங்களுக்கு பின்னர் அந்த இளம் பெண் வீடு திரும்பி வந்திருக்கிறார்.
தங்கள் மகள் தங்கள்வீட்டிற்கு பத்திரமாக திரும்பி வந்து விட்டார் என்று சந்தோஷம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொருபக்கம் சச்சினை இனிமேல் விட்டு வைக்கக் கூடாது எப்படியாவது கொன்றுவிட வேண்டும் என்று பெண்வீட்டார் ஆவேசத்தில் இருந்திருக்கிறார்கள் .
இதனையடுத்து அவர்கள் திட்டம்போட்டு சச்சினை ஒரு ஓட்டலுக்கு சாப்பிடவரும்படி அழைத்து இருக்கிறார்கள்.
அதனை நம்பிய சச்சின் அந்த ஓட்டலுக்கு சென்று இருக்கிறார்.
அங்கே நீங்க கேட்டான் ரஞ்சித் , கேத்தன், குல்தீப் ஆகிய மூன்று பேரும் தயாராக நின்று இருந்திருக்கிறார்கள்.
சச்சின் ஹோட்டலுக்கு சாப்பிடவந்ததும் தயாராக வைத்திருந்த வாளைஎடுத்து சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றிருக்கிறார்கள்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச்சென்று சச்சின் உடலைமீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விட்டு சம்பவம்குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற மூன்று பேரை பிடிக்க தனிப் படை அமைத்து தேடி வருகின்றனர்.
செய்தியாளர் பா. க. ஸ்ரீதேவி