தமிழ் விதை முன்பள்ளி பாட நூல் வெளியீட்டு வைப்பு

ஐ. ஏ. காதிர் கான்

UPDATED: Apr 30, 2024, 6:26:58 PM

Future Leader's முன் பள்ளியில் தமிழ் மொழி மாணவர்களுக்காக 'தமிழ் விதை' பாட நூல், முதன் முதலாக பாடசாலை அதிபர் லைலா அக்ஷியாவால்,   ஹொரேதுடுவை - முஸ்லிம் மகா வித்தியாலய அதிபர் எஸ். எச். முத்தலிப் கரங்களால் மாணவர்களுக்கு வெளியிட்டு வைக்கப்பட்டது.

  படத்தில், நூல்களைப் பெற்றுக் கொள்ளும் மாணவர்களில் சிலரும், முன்பள்ளி அதிபர் லைலா அக்ஷியா மற்றும் துணையாசிரியர் நஸ்ரா பானு ஆகியோர் காணப்படுகின்றனர்.

 மேற்படி நூல், தரம் ஒன்றுக்காக மாணவர்களைத் தயார் படுத்தும் நோக்கில், தமிழ் மொழியைப் படிப்படியாகவும் இலகுவாகவும் கற்கும் வகையில், சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



VIDEOS

Recommended