திமுக ஆட்சியில் அடிக்கடி கரண்ட் கட் ஆகும்,ரெஃப்ரிஜிரேட்டரை நம்பாதீங்க. திமுக ஆட்சியையும் நம்பாதீங்க பானையை பயன்படுத்துங்க.
S.முருகன்
UPDATED: Apr 27, 2024, 1:59:01 PM
கோடை வெப்பத்தின் தாகத்தை தணிக்கும் வகையில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.இதன் ஒரு அங்கமாக சென்னை பூந்தமல்லி நகர கழகம் சார்பில் நகர கழகச் செயலாளர் கே.எஸ. ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் பூந்தமல்லி பத்துக்கும் மேற்பட்ட வார்டுகளில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் இலவசமாக மண்பானை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பா.பெஞ்சமின் கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி நீர் மோர் பந்தலை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது இளநீர், தர்பூசணி, வெள்ளரி,மோர்,உள்ளிட்ட குளிர்ச்சியூட்டும் பழ வகைகளுடன் மண்பானையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
அப்பொழுது பொதுமக்களிடையே திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பா .பெஞ்சமின் பேசியதாவது:-
விடியா திமுக ஆட்சியில் அடிக்கடி மின் தட்டுபாடு ஏற்படும் காரணத்தினால் பொதுமக்கள் யாரும் ரெஃப்ரிஜிரேட்டரை நம்ப வேண்டாம் திமுக ஆட்சியையும் நம்ப வேண்டாம் மண்பானை பயன்படுத்துங்கள் என்றும் ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின் கட்டண உயர்வையும் பல மடங்கு உயர்த்தி உள்ளதாகவும் பல்வேறு ஏழை எளிய பாமர மக்கள் மின்சாரத்தை பயன்படுத்த முடியாமலும் இருக்கின்றனர்.
அப்படி மின்சாரத்தை பயன்படுத்தினால் அடுத்த மாதம் எவ்வளவு மின்சார கட்டணம் வரும் என்று பயந்து பொதுமக்கள் இன்றைக்கு மின்சாரத்தை பயன்படுத்த தயங்குகிறார்கள் குறிப்பிட்ட யூனிட் அதிகமாக பயன்படுத்தினால் கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
வசதி படைத்தவர்கள் எவ்வளவு மின் கட்டணத்தை உயர்த்தினாலும் பயன்படுத்துவார்கள் வசதி இல்லாத ஏழை எளிய பாமர மக்கள் இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விளை உயர்வு வீட்டு வரி குடிநீர் வரி சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரிகள் உயர்த்தப்பட்டிருக்கிறது.
மக்களுக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றாமல் கொள்ளையடிப்பதிலே இந்த ஆட்சி குறிக்கோளாக இருக்கின்றது.
மக்கள் இன்றைக்கு இருக்கின்ற சூழ்நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கவே மிகவும் சிரமப்படுகின்ற வேளையில் நீங்கள் ஃப்ரிட்ஜை வாங்கி பயன்படுத்தினால் கூடுதல் மின்சார கட்டணம் செலுத்த வேண்டியதாக இருக்கும்
ஆகையால் மண்பானை பயன்படுத்தினால் ஃப்ரிட்ஜை போல குடிநீரும் சில்லென்று குடிக்கலாம் உடலுக்கும் ஆரோக்கியம் இந்த விடியா திமுக ஆட்சியையும் நம்பி இருக்க வேண்டாம் எப்பொழுது வேண்டுமானாலும் மின்சாரம் நிறுத்தப்படலாம் ஆகையால் நாம் அனைவரும் இயற்கையோடு வளமாக வாழ பொது மக்களுக்கு இலவசமாக மண் பானைகளை பூந்தமல்லி நகர செயலாளர் கே.எஸ்.ரவிச்சந்திரன் ஏற்பாட்டில் வழங்க இருக்கின்றோம் இவ்வாறு திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளரும் கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்ருமான பா.பெஞ்சமின் பேசினார்.
கோடை வெப்பத்தின் தாக்கத்தை அறிந்து பொதுமக்களுக்கு இலவசமாக மன்பானை வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் பா.பென்ஜமினுக்கு அப்பகுதி மக்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் அதிமுக கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.