• முகப்பு
  • போக்சோ
  • மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு நீதிமன்றம் அசத்தல் தீர்ப்பு

மயிலாடுதுறை அருகே சிறுமியிடம் பாலியல் குற்ற வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு நீதிமன்றம் அசத்தல் தீர்ப்பு

செந்தில் முருகன்

UPDATED: Mar 29, 2024, 6:12:53 AM

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா சித்தாம்பூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி மகன் கண்ணன் (வயது 53). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியிடம், பாலியல் குற்றத்தில் ஈடுபட்டுள்ளார்.

Also Watch : தனது கட்சியின் சின்னத்தையே மறந்து கை சின்னத்தில் ஓட்டு கேட்ட ஜிகே வாசன்

இவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, நாகை முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற வந்தது.

இந்தநிலையில், இன்று இந்த வழக்கில் குற்றவாளி கண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு அபராத தொகை ருபாய் 20,000/- விதித்து, கட்டத் தவறினால் ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

Also Watch : நீங்கள் இது ஜனநாயக நாடு என்று நினைத்தாள் நான் ஒன்னும் பண்ண முடியாது - சீமான்

மேலும் பிரிவு 506(ii) IPC-ன்படி 7 வருடம் கடுங்காவல் சிறைதண்டனை மற்றும் அபராத தொகை ருபாய் 5,000/- விதித்தும், கட்டத்தவறினால் 6 மாதம் சிறைதண்டனையும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Watch : நெஞ்சு வலி மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கும் ஆற்றல் உடைய பழம் எது தெரியுமா ?

  • 17

VIDEOS

Recommended