• முகப்பு
  • வானிலை
  • நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது, விவசாயிகள் மகிழ்ச்சி.

நாகை, நாகூர், வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது, விவசாயிகள் மகிழ்ச்சி.

செ.சீனிவாசன்

UPDATED: Jan 7, 2024, 7:27:39 AM

லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுவதின் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

அதன்படி கடலோர கிராமங்களான அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், கல்லார், நம்பியார் நகர், சமந்தான்பேட்டை, பட்டினச்சேரி மற்றும் நாகை,நாகூர், வேளாங்கண்ணி, கீழ்வேளூர், தேவங்குடி, திட்டச்சேரி, பெருங்கடம்பனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை பெய்து வருகிறது. 

சம்பா தாளடி பயிர்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கவலைப்பட்டிருந்த நிலையில் இந்த மழை விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சி தந்துள்ளது என தெரிவித்துள்ளனர்.

VIDEOS

RELATED NEWS

Recommended