மண் சரிவினால் ஐந்து கடைகள் முற்றாக சேதம்.
பதுளை எம். கே.எம். நியார்
UPDATED: Dec 16, 2023, 2:10:07 PM
மண் சரிவினால் ஐந்து கடைகள் முற்றாக சேதம். தொடர்ச்சியான மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவுகளினால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் பதுளை,ஹாலி எலை நகரின் மத்தியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக ஐந்து கடைகள் முற்றாக உடைந்து மண்ணுக்கு அடியாகியுள்ளன.
அத்துடன் ஹாலி எலை உடுவரை 6 ஆம் கட்டை பகுதியில் பதுளை, கொழும்பு பிரதான பாதையின் ஒரு பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு ஏற்பட்டுள்ளதன் காரணமாக கொழும்பு மற்றும் தூர இடங்களுக்கு செல்லும் வாகனங்கள் வெளிமடை பாதையில் எட்டாம்பிட்டிய ஊடாக பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் பெரும் அசெளகரியங்களுக்குள்ளாகியுள்ளனர்.