குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மூன்று பேருக்கு பலத்த காயம்.

S.முருகன்

UPDATED: Jun 20, 2024, 7:33:06 PM

பூந்தமல்லி பஸ்லயத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது வேலப்பன்சாவடி மேம்பாலம் கீழே பேருந்து திரும்பிய போது குமணன்சாவடியிலிருந்து வேகமாக வந்த ஆட்டோ ஒன்று வேலப்பன்சாவடி மேம்பாலத்தின் கீழே பேருந்து வருவது தெரியாமல் வேகமாக திரும்பிய நிலையில் பேருந்தின் பக்கவாட்டில் ஆட்டோ மோதி  கவிழ்ந்தது

இதில் ஆட்டோவில் வந்த மூன்று பேர் பலத்த காயங்களுடன் தூக்கி வீசப்பட்ட நிலையில் ஆட்டோவும் அப்படியே அப்பளம் போல் நொறுங்கியது.

இதனை கண்டதும் அந்த வழியாக வந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து ஆட்டோவில் சிக்கி காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தனர் அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் ஆட்டோவை ஓட்டி வந்தவர்கள் அதிக குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவை வேகமாக ஓட்டி வந்து அரசு பேருந்து திரும்பியது தெரியாமல் அதன் மீது மோதியது விபத்திற்கு காரணம் என தெரியவந்தது.

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்க்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கிய ஆட்டோவை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

மேலும் குடிபோதையில் ஆட்டோவை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

VIDEOS

Recommended