• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஒற்றைக் காட்டு யானை உலா வருவதால் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடை விதித்த வனத்துறையினர்.

ஒற்றைக் காட்டு யானை உலா வருவதால் சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தடை விதித்த வனத்துறையினர்.

ராஜா

UPDATED: Jun 9, 2024, 6:45:38 PM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் அருகே அமைந்துள்ள சுற்றுலாத்தலமான மேகமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுருளி அருவியில் தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

தற்போது இன்றுடன் பள்ளி விடுமுறை முடிவடைவதை ஒட்டி அனேகம் பேர் சுருளி அருவிக்கு வருகை புரிய திட்டமிட்டு இருந்திருப்பார் அவர்களுக்கெல்லாம் ஏமாற்றம் அளிக்கும் விதமாக நேற்று இரவு முதல் ஒற்றை காட்டு யானை உலவி வருவதால் வனத்துறை அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளனர்.

மேலும் யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதால் மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளனர்.

 

VIDEOS

Recommended