உத்தமபாளையம் பைபாஸ் திடலில் நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

ராஜா

UPDATED: Jun 11, 2024, 5:09:25 AM

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா பல்லவராயன் பட்டியில் ஹரிச்சந்திரன் சாவில் உண்மை குற்றவாளியை கைது செய்ய கோரியும்,

அய்யம்பட்டியில் தமிழ் புலிகள் கட்சி நிர்வாகிகள் மீது ரவுடி முத்திரை குத்தாதே மற்றும் பட்டாளம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தினை மோசடி பத்திரப்பதிவை ரத்து செய்து பத்திரப்பதிவு செய்தவர்களை கைது செய்ய கோரியும் 

மேலும் உத்தமபாளையம் புதூரில் மாட்டுத் தீவனம் வைக்கோல் படப்பை தீவைத்து கொளுத்திய சமூக விரோதிகளை கைது செய்ய கோரியும் தீவைப்பில் மாட்டு தீவன சொத்தை இழந்த விவசாயி முத்து மற்றும் முரளி ஆகியோருக்கு ரூபாய் 5 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும் தமிழ் புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

இந்நிகழ்வில் தமிழ் புலிகள் கட்சிகளோடு விடுதலை சிறுத்தைகள் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். 

தலைமை தமிழ் புலிகள் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் வைரமுத்து தலைமையில் நடைபெற்றது.

முன்னிலை பாண்டியன் முகமது அசாருதீன் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் உத்தமபாளையம் ராஜா முகமது டிஎன்டிஜே போடி

மேலும் கண்டன உரை தமிழ் புலிகள் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் நா.சு. மணிவண்ணன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி உத்தமபாளையம் சிறுத்தை பாபு மற்றும் முபாரக் முன்னாள் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பு குழு தலைவர் மனிதநேய மக்கள் கட்சி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக முத்துகிருஷ்ணன் உத்தமபாளையம் பேரூர் செயலாளர் தமிழ் புலிகள் கட்சி நன்றி உரையாற்றினார்.

 

VIDEOS

Recommended