• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • ஏழாம் வகுப்பு மாணவன் 1 மணி நேரத்தில் 20 முட்டைகளில் 20 தேசத் தலைவர்களின் படத்தை வரைந்து உலக சாதனை.

ஏழாம் வகுப்பு மாணவன் 1 மணி நேரத்தில் 20 முட்டைகளில் 20 தேசத் தலைவர்களின் படத்தை வரைந்து உலக சாதனை.

அந்தோணி ராஜ்

UPDATED: May 5, 2024, 11:28:37 AM

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள அதிவீரன்பட்டியைச் சேர்ந்த அய்யனார் - ஜெயலட்சுமி -தம்பதியினர் இவர்களுக்கு 7ம் வகுப்பு பயிலும் சரண் சந்திரேஷ் என்ற மாணவனும், 4ம் வகுப்பு பயிலும் கவிபாரதி என்ற மகளும் உள்ளனர்.

இவருடைய மகன் சரண் சந்ரேத் சிவகாசியில் உள்ள தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் நிலையில் உலக சாதனை செய்ய வேண்டும் என்றதன் விருப்பத்தை தனது பெறறோர்களிடம் தெரிவிததுள்ளான்.

அதனை முன்னிட்டு இந்த மாணவனுக்கு முட்டையில் தேசத்தலை வர்களின் படத்தை வரைந்து உலக சாதனை செய்யும் என்ற ஆசையை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளான்.

அப்பொழுது பள்ளி மாணவன் பயிலும் பள்ளியில் ஓவியப் போட்டி நடைபெற்று வந்துள்ளது. அதில் பங்கேற்ற 7ம் வகுப்பு பயிலும் மாணவன் சரண் சந்தரேஷ் கலந்து கொண்டு 20 முட்டையில் மகாத்மா காந்தி, இந்திராந்தி, ராஜிவ்காந்தி, நேதாஜி, சர் சி.வி.ராமன், டாக்டர் ராதாகிருஷ்ணன், 

டாக்டர் அம்பேத்கர்.முத்துராமலிங்க தேவர், மகாகவி பாரதியார், பகத்சிங் போன்ற இந்திய நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட 20 தேசத் தலைவர்களின் உருவப்படத்தை 20 முட்டையில் 1 மணி நேரத்தில் வரைந்து, இந்தியன் புக் ஆப்ரெக்கார்ட்ஸ். மற்றும் கலாம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தார்.

இந்த மாணவனின் திறமையைப் பாராட்டி நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு அந்த மாணவனை அழைத்து பாராட்டினார்

இதற்கு முன்பு விருதுநகர் மாவட்டம் விஜயகரிசல் குளத்தை சேர்ந்த 11ம் வகுப்பு பயிலும் மாணவி 1 மணி நேரத்தில் 7 முட்டையில் 7 உலக அதிசயத்தின் படங்களை வரைந்ததே உலக சாதனையாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

  • 3

VIDEOS

Recommended