சேத்தியாத்தோப்பு அருகே  நாற்று நடும் போராட்டம்

சண்முகம்

UPDATED: Oct 6, 2024, 9:43:19 AM

கடலூர் மாவட்டம்

சேத்தியாத்தோப்பு அருகே ஒரத்தூர் கிராமத்தில் தூண்டில் வீரன் கோவில் தெருவில் அமைந்துள்ள சாலை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சேரும் சகதியுமாக இருந்து வருகிறது.

இதனால் இப்பகுதி சாலையைக் கடக்க குடியிருப்பு மக்களும், பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்களும் வேலைக்கு செல்வோரும் , விவசாய தொழிலாளர்களும் பெரிதும் சிரமம் அடைந்து வந்தனர்.

மேலும் சாலையை சீரமைக்க கோரி மாவட்ட நிர்வாகத்தின் நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை என வேதனை அடைந்த குடியிருப்பு வாசிகள் சேரும் சகதியுமான கிராம சாலையில் 50க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு நாற்று நடும் போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கும் போது இந்த சாலை பகுதியில் வருவாய் ஆய்வாளர் குடியிருப்பு, கோவில், காவல் நிலையம் அருகில் உள்ளது.

அரசு மருத்துவமனை மற்றும் வங்கிகள் என மிக முக்கியத்துவம் வாய்ந்ததுமான இந்த பகுதியில் உள்ள சாலை இவ்வாறு சேதம் அடைந்துள்ளது தினம் தினம் இப்பகுதி மக்களை வேதனைப்படுத்தி வருகிறது.

எங்களுக்கு வேறு வழி தெரியாமல் இந்த நாற்று நடும் போராட்டத்தை நடத்தினோம் என வேதனையோடு தெரிவித்தனர்.

 

VIDEOS

Recommended