மாங்காடு அருகே மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் தனியார் நிறுவன ஊழியர் பலி.

சுந்தர்

UPDATED: Jun 20, 2024, 2:43:07 PM

பூந்தமல்லி, திருவேங்கடம் நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் 45 ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சர்வீஸ் சாலை மலையம்பாக்கம் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையில் நின்று கொண்டிருந்த மாட்டின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மோகன் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கினார்

இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று பின்னர் மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மோகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் ஆவடி போக்குவரத்து புலபல்னாய்வு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்து போன மோகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தவர் மாட்டின் மீது மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

VIDEOS

Recommended