• முகப்பு
  • மாவட்டச் செய்தி
  • திருவள்ளுர் அருகே தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு.

திருவள்ளுர் அருகே தொடர் மின் வெட்டை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் அரை மணி நேரம் கடும் போக்குவரத்து பாதிப்பு.

ராஜ் குமார்

UPDATED: Jun 20, 2024, 6:52:56 PM

திருவள்ளுர் அடுத்த மேல்நல்லாத்துர் பகுதியில் சுமார் 2 ஆயிரம் குடியிருப்புகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

இப்பகுதியில் கடந்த 6 மாதமாக சீரான மின்சாரம் இல்லாமல் இரவு நேரத்தில் பச்சிளம் குழந்தைகள் வைத்துக் கொண்டும் பள்ளி கல்லூரி படிக்கும் மாணவர்கள் வெளிச்சம் இன்றி படிப்பதற்கு சிரமப்பட்டு வருவதாகவும்.

மின்சாரம் இல்லாததால் குடிதண்ணீரும் இல்லாத நிலையும் கொசுக்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும்.

ஆறு மாத காலமாக முறையான மின்சார மின் வெட்டு பிரச்சினை இருந்து வருவதால் அவதியடைந்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டம் மேற்கொண்டதால் அரை மணி நேரம் மேலாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அங்கே வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

பேட்டி சுகாசினி மேல்நல்லாத்தூர்.

 

VIDEOS

Recommended