கடல் அட்டை மீன்பிடிப்புக்கு மத்திய அரசு தடை நீக்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை.

கார்மேகம்

UPDATED: Jun 3, 2024, 7:17:50 PM

உலகில் இந்தியாவைத் தவிர எந்த நாட்டிலும் கடல் அட்டை மீன்பிடிப்புக்கு தடை இல்லை குறிப்பாக பாக்ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியின் மொத்த பரப்பளவில் இந்தியாவை விட மூன்று மடங்கு கூடுதலான அளவு கடல் பரப்பைக் கொண்ட இலங்கையில் கடல் அட்டை மீன்பிடிப்புக்கு தடைச் சட்டம் இல்லை

இந்தியாவில் மட்டும் கடல் அட்டையை பிடிக்க கூடாது என்று மீனவர்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் முட்டாள்த் தனமான சட்டத்தை மத்திய அரசு உடன் திரும்ப பெறவேண்டும்

இல்லையெனில் மீனவர்களின் போராட்டமும் தவிர்க்க முடியாது என்பதால் கடல் அட்டை பிடிக்கும் தடையை உடனே மத்திய அரசு நீக்க வேண்டும் என்று கடல் தொழிலாளர் சங்கம் மற்றும் மீனவர்களும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

VIDEOS

Recommended