![](assets/tgi-logo2.jpg)
- முகப்பு
- மாவட்டச் செய்தி
- உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.!!
உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.!!
![உலக யோகா தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் பிரம்ம குமாரிகள் அமைதி ஊர்வலம் நடத்தினர்.!!](https://api.thegreatindianews.com/uploads/original/world-yoga-day,-brahma-kumaris-held-a-peace-proces.jpg)
![](assets/avatar-profile-icon.webp)
ராஜா
UPDATED: Jun 21, 2024, 7:02:35 PM
அகில உலக யோகா தினத்தினை முன்னிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் யோகாவினால் ஏற்படும் பல நன்மைகளை எடுத்துரைப்பதற்காகவும் உத்தம பாளையத்தில் பிரஜா பிதா பிரம்ம குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ வித்யாலயா சார்பாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு அமைதி ஊர்வலமாக முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
இந்த அமைதி ஊர்வலம் மக்கள் யோகாவினால் ஏற்படக்கூடிய நன்மைகளை அறிந்து யோகாவினை வளர்க்கும் விதமாகவும் நோய் நொடிகள் இன்றி நீண்ட ஆயுளுடன் வாழவும் மன அமைதியும் மனத்தூய்மையும் அகத்தூய்மையும் பெற்று நோய் நொடி இல்லாமல் வாழ்வதற்காக இந்த அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
முன்னதாக உத்தமபாளையம் பிரம்ம குமாரிகள் செல்லாயிமிடத்திலிருந்து கொடியாசைத்து ஊர்வலமாக உத்தமபாளையத்தில் உள்ள முக்கிய வீதிகளில் சென்று தேரடி வீதி, வடக்கு ராதா வீதி சுங்கச்சாவட பூக்கடை சந்து வழியாக பேருந்து நிலையம் வந்து தெற்கு ரத ரீதி வழியாக வந்து செல்லாயி மடத்தில் அமைதி ஊர்வலத்தை முடித்துக் கொண்டனர்.
முன்னதாக ஊர்வலத்தின் முன்பு இசை வாசிப்புகளுடன் அமைதி ஊர்வலத்துக்கான பாதைகளை ஏந்தியபடி பெண்கள் அமைதியாக நடந்து தெருக்களில் வந்தது காண்போரை பிரமிப்படையச் செய்தது தெருக்களின் இருபுறமும் ஏராளமான பொதுமக்கள் கண்டு யோகாவின் முக்கியத்துவம் பற்றி அறிந்து கொண்டனர்.
இந்த ஊர்வலத்தில் ஏராளமான பிரம்ம குமாரிஸ் கலந்து கொண்டு ஊர்வலத்தில் அமைதியாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.