• முகப்பு
  • district
  • குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டே ஓடினார்களோ. அதே போல் விரைவில் திமுகவினரும் செல்வார்கள்.

குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டே ஓடினார்களோ. அதே போல் விரைவில் திமுகவினரும் செல்வார்கள்.

THE GREAT INDIA NEWS

UPDATED: Dec 17, 2022, 5:19:38 AM

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றபின் முதல்முறையாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வருகை தந்துள்ளார். அவரை கள்ளக்குறிச்சி அதிமுக மாவட்ட செயலாளர் இரா.குமரகுரு தலைமையிலான அதிமுகவினர் அதிர் வேட்டு முழங்க மேளதாளத்துடன் மலர்கள் தூவி உற்சாகத்துடன் சிறப்பான வரவேற்பு அளித்துள்ளனர். இதனை தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி:- இன்றைய தினம் கழகத்திற்கு ஒற்ற தலைமை வேண்டும் என உங்கள் குரல் ஒலித்தது உங்கள் குரல் ஒளியின் காரணமாக ஒற்றை தலைமை ஏற்படுத்தப்பட்டு கழக இடைக்கால பொதுச் செயலாளர் உங்கள் பெரு ஆதரவோடு பயணங்கள் எனக்கு வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சில பேர் நம்முடைய இயக்கத்தில் இருந்து கொண்டு அதிமுகவை அளிக்க வேண்டும் என்று சில பேர் செய்த சதியினால்தான் கடந்த காலத்தில் நம்மால் ஆட்சி பிடிக்க முடியாது நிலை ஏற்பட்டுள்ளது இன்றைக்கு யார் யாரெல்லாம் ஆட்சிக்கு வருவதற்கு தடையாக இருந்தாரோ அந்த தடை கற்கள் எல்லாம் உடைத்து எரிக்கப்பட்டது தமிழகத்தை ஆட்சி செய்தவரும் ஸ்டாலின் அவர்கள் கழகத்தை முடக்க பார்க்கிறார் இன்றைக்கு நமது துரோகிகளோடு சேர்ந்து கொண்டு எம்ஜிஆர் மாளிகையை சீல் வைத்திருக்கின்றார்கள் தமிழகத்தில் அதிக முறை ஆட்சியில் இருந்த ஒரே கட்சி அனைத்திந்திய முன்னேற்றக் கழகம் தான் 31 ஆண்டுகள் ஆட்சி செய்தது அதேபோல் தமிழகத்தின் மிக நீண்ட காலம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் அதிமுக தான். தற்பொழுது தமிழகத்தில் நடைபெற்று வருவது திமுகவின் அவள சட்ட ஒழுங்கு சீர்கெட்ட ஆட்சியாகும். மது எதிரிகள் ஆனா திமுகவுடன் கைகோர்த்து கழகத்திற்கு துரோகம் செய்த பன்னீர்செல்வம் திமுகவின் பீ டீமாக செயல்படுகிறார்,எம்ஜிஆர் ஆல் துவங்கப்பட்ட அதிமுகவை சில துரோகிகள் அழிக்க நினைத்தால் அவர்கள் அழிந்து விடுவார்கள். இலங்கையில் குடும்ப ஆட்சி நடத்திய ராஜபக்சே குடும்பத்தினர் எப்படி அந்த நாட்டு மக்களின் எதிர்ப்பால் நாட்டை விட்டே ஓடினார்களோ. அதே போல் விரைவில் இந்த திமுகவினரும் செல்வார்கள். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றகம் தொண்டர்களால் ஆன கட்சி தொண்டர்கள் நினைத்ததால் நான் தற்பொழுது இடைக்கால பொது செயலாளராக ஆனேன். இது எனக்காக காத்திருந்த அனைத்து தொண்டர்களுக்கும் நன்றி என கூறினர். கள்ளகுறிச்சி செய்தியாளர் ஆதி சுரேஷ்.

VIDEOS

RELATED NEWS

Recommended