• முகப்பு
  • இலங்கை
  • திருகோணமலை நகரில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டம்

திருகோணமலை நகரில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டம்

திருகோணமலை - ஏ. எம். கீத்

UPDATED: Apr 2, 2024, 9:25:55 AM

திருகோணமலை நகரில் உள்ள மணிக்கு கோபுர சந்தியில் மக்கள் போராட்ட இயக்கத்தினர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை இன்று காலை 11 மணியளவில் ஆரம்பித்து வைத்தனர்.

Also Read : யாழ். ஜெட்விங் ஹோட்டலில் மார்ச் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் 'திட்டக் கல்வி யாழ்பாணம்'

இந்த உணவு தவிர் போராட்டம் ஆனது மாலை 4 மணி வரைக்கும் அவ்விடத்தில் நடைபெறும் என அவர்கள் தெரிவித்தனர்.

Also Read : வேறு சின்னம் கொடுத்தாலும் அதனை மக்களிடம்

இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தில் பிரதேசத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற உள்ள அந்நிய சக்திகளின் தலையீடு மற்றும் திருகோணமலை நகரில் உள்ள சில பிரதேசங்கள் வேறு நாடுகளுக்கு குறிப்பாக இந்தியாவுக்கு விற்பனை செய்வதை எதிர்க்கும் முகமாக பிரதானமாக உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

 மேலும் பொதுமக்களுக்கு இவ் உணவு தவிர்ப்பு போராட்டத்தை விளக்கப்படுத்தும் நோக்கமாகவும் நகரில் உள்ள பிரதேசங்கள் வேறு நாடுகளுக்கு விற்பனை செய்வதை தவிர்க்க அல்லது தடுக்கும் முகமாக அது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தை கொண்டு துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டது.

Also Read : ஒட்டமாவடி பிரதேச செயலாளராக அபூபக்கர் தாஹிர்

VIDEOS

RELATED NEWS

Recommended