மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல்
கெளசல்யா
UPDATED: Dec 16, 2023, 5:21:06 AM
நு/கொட்டகலை தமிழ் மகா வித்தியாலம் தேசிய பாடசாலையின் மாணவர் பாராளுமன்ற பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான தேர்தல் அதிபர் தேசபந்து இரா.சிவலிங்கம் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்றது.சமூக விஞ்ஞானப்பிரிவு ஆசிரியர்களின் ஏற்பாட்டில் அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்போடு தேர்தல் பணிகள் மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
இந்நிகழ்வில் நுவரெலியா கல்வி வலய ஆசிரிய ஆலோசகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர், பா.அ.ச உறுப்பினர்கள், ப.மா.ச உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தார்கள்.